கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே துணைத்தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு பணம் கையாடல் செய்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்தனர்.
கொரக்காவாடி ஊராட்சி மன்ற தலைவராக சக்திவேலும், துணைத்தலைவராக தங்கமணியும் பதவி வகித்து வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு துணைத்தலைவர் தங்கமணியின் கையெழுத்தை போலியாக போட்டு ஊராட்சி கணக்கில் இருந்து சக்திவேல் 2 லட்சத்து 70 ஆயிரம் பணம் எடுத்ததாக புகார் எழுந்தது.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்டபோது அவர் பணம் எடுத்தது உறுதியானதால் போலீசார் அவரை கைது செய்தனர்.