மாருதி சுசூகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறவனமான மாருதி சுசூகி தனது வாடிக்கையாளர்களுக்காக புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தனது விட்டாரா மாடலின் அப்டேட் வெர்ஷனான கிராண்ட் விட்டாராவை கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்தது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு 22 மாதங்களிலேயே 2 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை முறியடித்து மிக குறுகிய காலத்தில் 2 லட்சம் யூனிட்டுகளை கடந்த எக்ஸ்யூவி என்ற பெருமையை பெற்றுள்ளது.