14 மணி நேர வேலை ஊழியர்களை வஞ்சிக்கிறதா கர்நாடக அரசு?
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 மணி நேர வேலை ஊழியர்களை வஞ்சிக்கிறதா கர்நாடக அரசு?

Murugesan M by Murugesan M
Jul 26, 2024, 08:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வாரம் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்ட மசோதாவை கொண்டுவந்த கர்நாடக அரசு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்நிலையில், தினமும் 14 மணி நேர வேலை என்ற புதிய மசோதாவைக் கொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரம் வரை நீட்டிக்க வழி வகை செய்யும் ,‘கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கான, முன்மொழிவு தொழில்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் கர்நாடக அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அதன் படி, ஐ டி துறையில் ஒரு ஊழியரின் பணி நேரம்,ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் 125 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் தற்போது , தொழிலாளர் சட்டங்கள் 10 மணி நேரமும் கூடுதலாக 2 மணி நேர ஓவர் டைம் என்ற அடிப்படையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன .

இந்நிலையில், வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணிநேரமாக உயர்த்தும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை கர்நாடகாவில் உள்ள ஐடி துறை தொழிற்சங்கங்கள் மிக கடுமையாக எதிர்த்துள்ளன.

கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான KITU இந்த சட்டத் திருத்தம், தற்போது 3 ஷிப்ட் என்ற நடைமுறையை இரண்டு ஷிப்ட் டாக மாற்றும் என்றும், அதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரித்தால் 35 சதவீத ஊழியர்களுக்கு பக்கவாத நோயால் ஆபத்து உண்டாகும் என்றும், 17 சதவீத ஊழியர்கள் இதய நோயால் இறக்கும் அபாயமும் உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதை சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா, அரசின் சட்டத் திருத்தத்தால் , மாநிலத்தில் உள்ள 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது கர்நாடக அரசின் மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ள ஐடி நிறுவன ஊழியர்கள், ஊழியர்களை மனிதர்களாக பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஐ டி துறையில் 45 சதவீத ஊழியர்கள் மனச் சோர்வினாலும், 55 சதவீத ஊழியர்கள் உடல்நலப் பிரச்சனையினாலும் பாதிப்படைந்துள்ளனர். இதில் மேலும் வேலை நேரத்தை அதிகரித்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக அரசின், முன்மொழிவை தாங்கள் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ள நாஸ்காம் NASSCOM என்ற மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம், கர்நாடக அரசின் இந்த சட்ட திருத்த மசோதாவை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

சிறந்த முறையில் வேலைநேரம் வாரத்துக்கு 36 முதல் 48 மணிநேரமாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் ஊழியர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ மாணவர்களின் சர்வதேசசங்கத்தின் தலைவர் டாக்டர் ஷுபம் ஆனந்த் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

எனவே இந்த சட்ட திருத்தத்தை கர்நாடக அரசு உடனே திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

கடந்த ஆண்டு, இந்தியாவின் வளர்ச்சிக்காக வாரத்தில் 70 மணிநேரம் உழைக்க நாட்டின் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Tags: 14-hour work Karnataka government cheating employees?
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட் விண்வெளித் துறைக்கு 1000 கோடி ஒதுக்கீடு ஏன்?

Next Post

கன்வர் யாத்திரை! – காவடியை உருவாக்கும் இஸ்லாமியர்கள்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies