14 மணி நேர வேலை ஊழியர்களை வஞ்சிக்கிறதா கர்நாடக அரசு?
Aug 24, 2025, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 மணி நேர வேலை ஊழியர்களை வஞ்சிக்கிறதா கர்நாடக அரசு?

Web Desk by Web Desk
Jul 26, 2024, 08:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த வாரம் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்ட மசோதாவை கொண்டுவந்த கர்நாடக அரசு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்நிலையில், தினமும் 14 மணி நேர வேலை என்ற புதிய மசோதாவைக் கொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஊழியர்களின் வேலை நேரத்தை 14 மணி நேரம் வரை நீட்டிக்க வழி வகை செய்யும் ,‘கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதாவை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கான, முன்மொழிவு தொழில்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் கர்நாடக அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

அதன் படி, ஐ டி துறையில் ஒரு ஊழியரின் பணி நேரம்,ஒரு நாளைக்கு 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களில் 125 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் தற்போது , தொழிலாளர் சட்டங்கள் 10 மணி நேரமும் கூடுதலாக 2 மணி நேர ஓவர் டைம் என்ற அடிப்படையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன .

இந்நிலையில், வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணிநேரமாக உயர்த்தும் கர்நாடக மாநில அரசின் திட்டத்தை கர்நாடகாவில் உள்ள ஐடி துறை தொழிற்சங்கங்கள் மிக கடுமையாக எதிர்த்துள்ளன.

கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான KITU இந்த சட்டத் திருத்தம், தற்போது 3 ஷிப்ட் என்ற நடைமுறையை இரண்டு ஷிப்ட் டாக மாற்றும் என்றும், அதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகரித்தால் 35 சதவீத ஊழியர்களுக்கு பக்கவாத நோயால் ஆபத்து உண்டாகும் என்றும், 17 சதவீத ஊழியர்கள் இதய நோயால் இறக்கும் அபாயமும் உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதை சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா, அரசின் சட்டத் திருத்தத்தால் , மாநிலத்தில் உள்ள 20 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது கர்நாடக அரசின் மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ள ஐடி நிறுவன ஊழியர்கள், ஊழியர்களை மனிதர்களாக பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ஐ டி துறையில் 45 சதவீத ஊழியர்கள் மனச் சோர்வினாலும், 55 சதவீத ஊழியர்கள் உடல்நலப் பிரச்சனையினாலும் பாதிப்படைந்துள்ளனர். இதில் மேலும் வேலை நேரத்தை அதிகரித்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

கர்நாடக அரசின், முன்மொழிவை தாங்கள் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ள நாஸ்காம் NASSCOM என்ற மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம், கர்நாடக அரசின் இந்த சட்ட திருத்த மசோதாவை முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

சிறந்த முறையில் வேலைநேரம் வாரத்துக்கு 36 முதல் 48 மணிநேரமாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் ஊழியர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய மருத்துவ மாணவர்களின் சர்வதேசசங்கத்தின் தலைவர் டாக்டர் ஷுபம் ஆனந்த் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

எனவே இந்த சட்ட திருத்தத்தை கர்நாடக அரசு உடனே திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

கடந்த ஆண்டு, இந்தியாவின் வளர்ச்சிக்காக வாரத்தில் 70 மணிநேரம் உழைக்க நாட்டின் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Tags: 14-hour work Karnataka government cheating employees?
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட் விண்வெளித் துறைக்கு 1000 கோடி ஒதுக்கீடு ஏன்?

Next Post

கன்வர் யாத்திரை! – காவடியை உருவாக்கும் இஸ்லாமியர்கள்!

Related News

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies