வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!
Jul 30, 2026, 12:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Manikandan by Manikandan
Jan 13, 2026, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாம் தான் என்று அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கியூபாவின் அதிபரையும் அடாவடியாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது…. பலவீனமான நாடுகள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் டிரம்பின் நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது

வெனிசுலா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட அமெரிக்கா, அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் சிறைபிடித்தது… வெனிசுலாவின் செழிப்பான எண்ணெய் வளத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்… அமெரிக்காவின் வெளிப்படையான அத்துமீறலை சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்த நிலையில், அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அதிபர் டிரம்ப்

வெனிசுலா அதிபர் கைது நடவடிக்கைக்கு பின்னர், அமெரிக்காவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கும் தனது அதிகார மமதையால் மிரட்டல் விடுத்திருக்கிறார் டிரம்ப்… கியூபாவின் 50 சதவிகித எரிசக்தி தேவையை வெனிசுலா பூர்த்தி செய்துவந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால் கியூபாவுக்கான எரிசக்தி சங்கிலி அறுந்துள்ளது…. இதனை கோடிட்டு காட்டியுள்ள டிரம்ப், கியூபா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், வாஷிங்டனின் தலையீடு இன்றி கியூபா தானாகவே வீழும் என்றும், விரைவில் கியூபா மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்,

ஒருவேளை அமெரிக்கா, கியூபாவை கைப்பற்றினால் அதிபராக மார்கோ ரூபியோ நியமிக்கப்படுவாரா என நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விக்கு இது நல்ல யோசனை என்று ஆமோதித்துள்ளார் டிரம்ப்… வெனிசுலாவிடம் இருந்து அதிகளவு எண்ணெய், பணத்தை பெற்று வாழ்ந்த கியூபா, வெனிசுலாவின் கடைசி இரண்டு சர்வாதிகாரிளுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியதாகவும், இனி அது தேவைப்படாது என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்… உலகின் மிக சக்தி வாய்ந்த ராணுவமான அமெரிக்கா, தற்போது வெனிசுலாவிடம் உள்ளதாகவும், இனி கியூபாவுக்கு எண்ணெயோ, பணமோ செல்லாது என்றும் கூறியுள்ளார்,

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, கியூபாவின் அடுத்த அதிபர் என்ற கருத்தை டிரம்ப் ஆழமாக ஆமோதித்திருப்பது கியூபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது… டிரம்பின் அறிக்கைக்கு பதிலளித்த கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், மற்ற நாடுகளுக்கு வழங்கிய பாதுகாப்பு சேவைக்கு கியூபா எவ்வித பணமோ, பொருளோ பெறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். அமெரிக்காவைப் போல் அல்லாமல், கியூபா மற்ற நாடுகளுடனான அதன் பரிவர்த்தனைகளில் கூலிப்படை, மிரட்டல் அல்லது ராணுவ வற்புறுத்தலை நம்பியிருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்

அமெரிக்காவின் அதிகார துஷ்பிரயோகமும், டிரம்பின் அடாவடி பேச்சும், உலக நாடுகளின் அமைதியையும், பாதுகாப்பையும் அச்சுறுத்துவதாகக் கண்டித்துள்ளார்.. உரிமையும், நீதியும் கியூபாவின் பக்கம் இருக்கும் நிலையில், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை தங்கள் தேசத்திற்காக போராடுவோம் என்றும் ரோட்ரிகஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்…அமெரிக்காவின் தலையீடு இல்லாமல், எரிபொருளை ஏற்றுமதி செய்யும் எந்த நாடுகளிடமிருந்தும், வர்த்தகம் செய்யும் உரிமை கியூபாவுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்,

முன்னதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் விதமாக லத்தீன் அமெரிக்கா ஒற்றுமையாக செயல்பட அழைப்பு விடுத்தார். லத்தீன் அமெரிக்க நாடுகள் வெளிநாட்டு சக்திகளின் சேவகர்களாக மாறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்,

இந்த சூழலில் வெனிசுலாவின் செயல் அதிபர் ஜனவரி 2026-இல் பதவியேற்பார் என்ற அறிவிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்தப் படம் டிரம்பை அமெரிக்காவின் 45 மற்றும் 47வது அதிபராகவும் பட்டியலிட்டுள்ளது. மதுரோவின் நீக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மத்தியில் வெனிசுலாவின் துணைத் தலைவரும், பெட்ரோலிய அமைச்சருமான டெல்சி ரோட்ரிக்ஸ், அண்மையில் இடைக்கால அதிபராக முறையாகப் பதவியேற்றார். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் செயல் அதிபராக உள்ளதாக பரவும் தகவல் புவிசார் அரசியலில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது… அனைத்து நாடுகள் மீதும் அடக்குமுறையை கையாளும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது…

Tags: Venezuelan President Nicolás Maduronicolas maduro CASEvenezuela PMArmyusaDonald TrumpTrumpvenezuelaNicolas Maduro.
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies