“கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
1860 -ஆம் ஆண்டு ஜூலை 24 -ம் தேதி வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் வருமான வரி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,
“இந்தியாவில், வருமானவரித்துறையின் பங்கு மிக சிறப்பாக உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “வருமானவரித்துறையில் நேர்மையாகவும், திறமையாகவும் பல அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்” என்றும் புகழாராம் சூட்டினார்.