கன்வர் யாத்திரை! - காவடியை உருவாக்கும் இஸ்லாமியர்கள்!
Aug 24, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்வர் யாத்திரை! – காவடியை உருவாக்கும் இஸ்லாமியர்கள்!

Web Desk by Web Desk
Jul 26, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்வர் யாத்திரை செல்லும் பாதைகளில் இருக்கும் உணவகங்களில் உரிமையாளர் பெயர்கள் எழுதி வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், இந்த யாத்திரைக்கான காவடிகளைத் தயாரிக்கும் தொழிலில் 80 சதவீதம் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

கன்வர் என்றால் காவடி. கன்வர் யாத்திரை என்பது காவடி யாத்திரை எனப்படும். மூங்கிலால் ஆன இந்த காவடியில் எதிர் எதிர் முனையில் இரண்டு மண் பானைகள் இணைக்கப்பட்டிருக்கும். அழகிய வண்ணங்களுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த மண் பானையில் தான், யாத்திரையின் போது கங்கை நீரை சிவ பக்தர்கள் சேகரித்து வருவார்கள்.

இதற்காகவே, தெற்கு கோவாவில் இருக்கும் பேட் தீவு மற்றும் ஹரித்வாரில் உள்ள பந்ததீப் பார்க்கிங்கில் காவடி கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுவதுண்டு. மீரட், சஹாரன்பூர், முசாபர்நகர், டெல்லி மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காவடி கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.

ஹரித்வாரில் பெரும்பாலான காவடிகள் ஜ்வாலாபூரில் உள்ள இந்திர பஸ்தியில் உள்ள இஸ்லாமிய கை வினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.

காவடியின் அளவு மற்றும் துணியில் உள்ள நுணுக்கமான அலங்காரக் கலைத்திறன் அளவைப் பொறுத்து, ஒரு காவடியின் விலை 500 ரூபாயிலிருந்து 30000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பல இஸ்லாமிய குடும்பங்கள், தங்கள் குலத்தொழிலாகவே இந்த காவடிகளைத் தயாரித்து வருகிறார்கள்.

ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மூங்கில் குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை இந்து தெய்வ உருவம் அச்சிடப்பட்ட துணியால் அலங்கரித்து, துணியில் ஜிகினா போன்ற பிற அலங்காரங்களை ஒட்டி காவடியை அழகாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

தமது தாத்தா காலத்திலிருந்தே காவடிகளைத் தயாரித்து வருவதாக கூறும் 16 வயதான ஷாகிப் ஸ்க்ரோல், இந்து, இஸ்லாமியர் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் என்பதால் இதைத் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இரவு பகலாக வேலை செய்து, கன்வர் யாத்திரை காலங்களில் , ஒரு இஸ்லாமிய குடும்பம் சராசரியாக 1000 காவடிகளைத் தயாரிக்கிறது என்று காவடி செய்யும் கைவினைக் கலைஞரான நதீம் அகமது தெரிவிக்கிறார்.

15 ஆண்டுகளாக காவடிகளைத் தயாரிக்கும் இன்னொரு கைவினைக் கலைஞர் அப்ரார், எல்லா இந்துகளும், இஸ்லாமியருக்கு சகோதரர்களே என்று கூறியிருக்கிறார்.

சிவ பக்தர்களும் தங்கள் கைவினைக் கலைநயத்தைப் பாராட்டுகிறார்கள் என்று கூறும் இஸ்லாமியரான மணீஷ் சௌத்ரி, சகோதரத்துவத்தின் அடையாளமாக, இஸ்லாமியர் உருவாக்கிய காவடியை இந்துக்கள் வாங்கிச் செல்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

காவடி தயாரிப்பதை தங்கள் குடும்பத் தொழிலாக செய்து வரும் ரெஹான், சிவ பக்தர்களுக்கு காவடி செய்து தரும் சின்ன உதவியை செய்வது அதிர்ஷ்டம் என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

கன்வர் யாத்திரையின் போது மத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை இது காட்டுகிறது.

Tags: Kanwar Pilgrimage! - Muslims who make Kavadi
ShareTweetSendShare
Previous Post

14 மணி நேர வேலை ஊழியர்களை வஞ்சிக்கிறதா கர்நாடக அரசு?

Next Post

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு தினம்! – போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies