கன்வர் யாத்திரை! - காவடியை உருவாக்கும் இஸ்லாமியர்கள்!
Jan 14, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்வர் யாத்திரை! – காவடியை உருவாக்கும் இஸ்லாமியர்கள்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்வர் யாத்திரை செல்லும் பாதைகளில் இருக்கும் உணவகங்களில் உரிமையாளர் பெயர்கள் எழுதி வைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், இந்த யாத்திரைக்கான காவடிகளைத் தயாரிக்கும் தொழிலில் 80 சதவீதம் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

கன்வர் என்றால் காவடி. கன்வர் யாத்திரை என்பது காவடி யாத்திரை எனப்படும். மூங்கிலால் ஆன இந்த காவடியில் எதிர் எதிர் முனையில் இரண்டு மண் பானைகள் இணைக்கப்பட்டிருக்கும். அழகிய வண்ணங்களுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த மண் பானையில் தான், யாத்திரையின் போது கங்கை நீரை சிவ பக்தர்கள் சேகரித்து வருவார்கள்.

இதற்காகவே, தெற்கு கோவாவில் இருக்கும் பேட் தீவு மற்றும் ஹரித்வாரில் உள்ள பந்ததீப் பார்க்கிங்கில் காவடி கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுவதுண்டு. மீரட், சஹாரன்பூர், முசாபர்நகர், டெல்லி மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காவடி கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.

ஹரித்வாரில் பெரும்பாலான காவடிகள் ஜ்வாலாபூரில் உள்ள இந்திர பஸ்தியில் உள்ள இஸ்லாமிய கை வினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.

காவடியின் அளவு மற்றும் துணியில் உள்ள நுணுக்கமான அலங்காரக் கலைத்திறன் அளவைப் பொறுத்து, ஒரு காவடியின் விலை 500 ரூபாயிலிருந்து 30000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பல இஸ்லாமிய குடும்பங்கள், தங்கள் குலத்தொழிலாகவே இந்த காவடிகளைத் தயாரித்து வருகிறார்கள்.

ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மூங்கில் குச்சிகளை ஒன்றாகக் கட்டி, அதை இந்து தெய்வ உருவம் அச்சிடப்பட்ட துணியால் அலங்கரித்து, துணியில் ஜிகினா போன்ற பிற அலங்காரங்களை ஒட்டி காவடியை அழகாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

தமது தாத்தா காலத்திலிருந்தே காவடிகளைத் தயாரித்து வருவதாக கூறும் 16 வயதான ஷாகிப் ஸ்க்ரோல், இந்து, இஸ்லாமியர் இடையே சகோதரத்துவத்தை வளர்க்கும் என்பதால் இதைத் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இரவு பகலாக வேலை செய்து, கன்வர் யாத்திரை காலங்களில் , ஒரு இஸ்லாமிய குடும்பம் சராசரியாக 1000 காவடிகளைத் தயாரிக்கிறது என்று காவடி செய்யும் கைவினைக் கலைஞரான நதீம் அகமது தெரிவிக்கிறார்.

15 ஆண்டுகளாக காவடிகளைத் தயாரிக்கும் இன்னொரு கைவினைக் கலைஞர் அப்ரார், எல்லா இந்துகளும், இஸ்லாமியருக்கு சகோதரர்களே என்று கூறியிருக்கிறார்.

சிவ பக்தர்களும் தங்கள் கைவினைக் கலைநயத்தைப் பாராட்டுகிறார்கள் என்று கூறும் இஸ்லாமியரான மணீஷ் சௌத்ரி, சகோதரத்துவத்தின் அடையாளமாக, இஸ்லாமியர் உருவாக்கிய காவடியை இந்துக்கள் வாங்கிச் செல்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

காவடி தயாரிப்பதை தங்கள் குடும்பத் தொழிலாக செய்து வரும் ரெஹான், சிவ பக்தர்களுக்கு காவடி செய்து தரும் சின்ன உதவியை செய்வது அதிர்ஷ்டம் என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

கன்வர் யாத்திரையின் போது மத எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை இது காட்டுகிறது.

Tags: Kanwar Pilgrimage! - Muslims who make Kavadi
ShareTweetSendShare
Previous Post

14 மணி நேர வேலை ஊழியர்களை வஞ்சிக்கிறதா கர்நாடக அரசு?

Next Post

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு தினம்! – போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

Related News

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies