பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் - அதிர்ச்சியூட்டும் பின்னணி!
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா முழுவதும் பைரசி படங்களை இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? எப்படி கைதானார்? என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் 2 கவலைகள் ஏற்படும். ஒன்று, இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும். மற்றொரு, இந்தப் படம் முதல் நாளிலேயே பைரசியில் வெளியாகிவிடக் கூடாது. அந்த அளவுக்குப் பைரசி இந்திய திரையுலகினரை கதிகலங்க செய்து வருகிறது.

புதிய படங்களை யார் இணையத்தில் பதிவேற்றுகிறார்கள்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? இந்த நெட்வொர்க்கில் யாரெல்லாம் உள்ளார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. அதுகுறித்து அனைத்து மாநில போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், பீகார் தலைநகர் பாட்னாவில் வைத்துப் பைரசி கும்பல் ஒன்றை ஹைதராபாத் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பட்னாவில் குறிப்பிட்ட வீடொன்றில் சோதனை செய்த அவர்கள், அங்கிருந்த கணினிகள், சர்வர்கள், ஹேக்கிங் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன், இந்தியா முழுவதும் வெளியாகும் படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்த நபரையும் கைது செய்தனர். அவர் ஒரு இளைஞர். வெறும் 21 வயதேயான இளைஞர்.

அவரது பெயர் அஷ்வணி குமார் (Ashwani Kumar). காலேஜ் ட்ராப் அவுட்டான இவர், சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் கணினிகளை ஹேக் செய்து, அங்குள்ள புதிய திரைப்படங்களை நகலெடுத்துள்ளார். படம் வெளியான சில மணிநேரங்களில் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தமிழகத்தின் கரூரை சேர்ந்த சிரில் ராஜ் என்பவர் இவருக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடி்க்கப்பட்டுள்ளது.

அவர் பிரான்சில் இருந்து செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திப் படங்களை அப்லோடு செய்துகொடுத்துள்ளார். திரையரங்குகளில் ரகசிய கேரமராக்களை பொருத்தியும் புதிய திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறுதிரையரங்குகளுக்குத் தங்கள் ஆட்களை அனுப்பி அஷ்வணி குமார்படத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் அவ்வாறு படங்களை ரெக்கார்டு செய்த சுதாகரன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், 1TamilBlasters, 5MoviezRulz, 1TamilMV போன்ற சட்டவிரோத வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்கள் வெளியான முதல் நாளே HD ப்ரிண்டில் இணையத்தில் வெளியானதற்கு அஷ்வணி குமாரின் கைவண்ணம்தான் காரணம். ஹிந்தி திரைப்படங்கள், பிராந்திய திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அவர் அனைத்து படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதுவரை 135 படங்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும், ஒரு படத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையில் கோடி கணக்கில் அவர் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சரி, ஹேக்கிங் செய்வதைஇந்தச் சிறு வயதில் எப்படிகற்றுக்கொண்டாயெனன கேட்டதற்கு, யூடியூப்பார்த்துக் கொண்டேன் என அஷ்வணி குமார்கூலாகப் பதிலளித்துள்ளார்.

அவரை போலீசார் எவ்வாறு கைது செய்ததார்கள் என்பதும் சுவாரஸ்யான ஒன்றுதான். ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் பைரசி படங்களை வாங்குபவர்களை போல நடித்து, அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர் கேட்ட பணத்தை, கிரிப்டோ கரன்சியாகயும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனை நம்பிய அஷ்வணி குமார் சற்று அசந்த நேரம் பார்த்து, போலீசார் நேரில் சென்று அவரை கொத்தாகத் தூக்கி விட்டார்கள்.

படங்கள் எப்படி திருடப்பட்டன, அவை எவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை சிரஞ்சீவி, நானி, நாகார்ஜூனா உள்ளிட்ட திரைத்துறையினருக்கு போலீசார் விளக்கியுள்ளனர். கைதான இளைஞரிடம் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பைரசி நெட்வொர்க்கை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஆகவே, இனி பைரசி படங்களே வராதா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், இந்தியாவில் பைரசி படங்களைப் பதிவேற்றும் பல நெட்வொர்க்குகள் இயங்கி வருகின்றன. அவற்றைச் சேர்ந்த ஒரு அஷ்வணி குமாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மற்ற அஷ்வணி குமார்களும் கைது செய்யப்படும்போதுதான், இந்தப் பைரசி விவகாரம் ஒரு முடிவுக்கு வரும்.

Tags: 21-year-old youth uploads pirated images: Shocking network - shocking backgroundஅதிரவைக்கும் நெட்வொர்க்Cinemacinema newstoday news
Share
Tweet
SendShare
Previous Post

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Next Post

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies