பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் - அதிர்ச்சியூட்டும் பின்னணி!
Apr 29, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா முழுவதும் பைரசி படங்களை இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? எப்படி கைதானார்? என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு படத்தை எடுத்து முடித்தவுடன் 2 கவலைகள் ஏற்படும். ஒன்று, இந்தப் படம் நன்றாக ஓட வேண்டும். மற்றொரு, இந்தப் படம் முதல் நாளிலேயே பைரசியில் வெளியாகிவிடக் கூடாது. அந்த அளவுக்குப் பைரசி இந்திய திரையுலகினரை கதிகலங்க செய்து வருகிறது.

புதிய படங்களை யார் இணையத்தில் பதிவேற்றுகிறார்கள்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? இந்த நெட்வொர்க்கில் யாரெல்லாம் உள்ளார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. அதுகுறித்து அனைத்து மாநில போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்தான், பீகார் தலைநகர் பாட்னாவில் வைத்துப் பைரசி கும்பல் ஒன்றை ஹைதராபாத் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பட்னாவில் குறிப்பிட்ட வீடொன்றில் சோதனை செய்த அவர்கள், அங்கிருந்த கணினிகள், சர்வர்கள், ஹேக்கிங் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன், இந்தியா முழுவதும் வெளியாகும் படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்த நபரையும் கைது செய்தனர். அவர் ஒரு இளைஞர். வெறும் 21 வயதேயான இளைஞர்.

அவரது பெயர் அஷ்வணி குமார் (Ashwani Kumar). காலேஜ் ட்ராப் அவுட்டான இவர், சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் கணினிகளை ஹேக் செய்து, அங்குள்ள புதிய திரைப்படங்களை நகலெடுத்துள்ளார். படம் வெளியான சில மணிநேரங்களில் அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தமிழகத்தின் கரூரை சேர்ந்த சிரில் ராஜ் என்பவர் இவருக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடி்க்கப்பட்டுள்ளது.

அவர் பிரான்சில் இருந்து செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திப் படங்களை அப்லோடு செய்துகொடுத்துள்ளார். திரையரங்குகளில் ரகசிய கேரமராக்களை பொருத்தியும் புதிய திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறுதிரையரங்குகளுக்குத் தங்கள் ஆட்களை அனுப்பி அஷ்வணி குமார்படத்தைப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் அவ்வாறு படங்களை ரெக்கார்டு செய்த சுதாகரன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும், 1TamilBlasters, 5MoviezRulz, 1TamilMV போன்ற சட்டவிரோத வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்கள் வெளியான முதல் நாளே HD ப்ரிண்டில் இணையத்தில் வெளியானதற்கு அஷ்வணி குமாரின் கைவண்ணம்தான் காரணம். ஹிந்தி திரைப்படங்கள், பிராந்திய திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், சிறிய பட்ஜெட் படங்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி அவர் அனைத்து படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதுவரை 135 படங்களை அவர் வெளியிட்டுள்ளதாகவும், ஒரு படத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறையில் கோடி கணக்கில் அவர் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சரி, ஹேக்கிங் செய்வதைஇந்தச் சிறு வயதில் எப்படிகற்றுக்கொண்டாயெனன கேட்டதற்கு, யூடியூப்பார்த்துக் கொண்டேன் என அஷ்வணி குமார்கூலாகப் பதிலளித்துள்ளார்.

அவரை போலீசார் எவ்வாறு கைது செய்ததார்கள் என்பதும் சுவாரஸ்யான ஒன்றுதான். ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் பைரசி படங்களை வாங்குபவர்களை போல நடித்து, அவரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர் கேட்ட பணத்தை, கிரிப்டோ கரன்சியாகயும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனை நம்பிய அஷ்வணி குமார் சற்று அசந்த நேரம் பார்த்து, போலீசார் நேரில் சென்று அவரை கொத்தாகத் தூக்கி விட்டார்கள்.

படங்கள் எப்படி திருடப்பட்டன, அவை எவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை சிரஞ்சீவி, நானி, நாகார்ஜூனா உள்ளிட்ட திரைத்துறையினருக்கு போலீசார் விளக்கியுள்ளனர். கைதான இளைஞரிடம் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பைரசி நெட்வொர்க்கை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஆகவே, இனி பைரசி படங்களே வராதா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், இந்தியாவில் பைரசி படங்களைப் பதிவேற்றும் பல நெட்வொர்க்குகள் இயங்கி வருகின்றன. அவற்றைச் சேர்ந்த ஒரு அஷ்வணி குமாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மற்ற அஷ்வணி குமார்களும் கைது செய்யப்படும்போதுதான், இந்தப் பைரசி விவகாரம் ஒரு முடிவுக்கு வரும்.

Tags: 21-year-old youth uploads pirated images: Shocking network - shocking backgroundஅதிரவைக்கும் நெட்வொர்க்Cinemacinema newstoday news
ShareTweetSendShare
Previous Post

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Next Post

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies