தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!
Sep 12, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்பொருட்களைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரோசனபட்டி கிராமம் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளது. கரும்பு, வாழை , பருத்தி, தக்காளி, வெண்டைக்காய் என பல்வேறு வகையிலான விவசாயங்களே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறது.

அத்தகைய விவசாய பூமியான ரோசனப்பட்டியிலிருந்து பிராதிக்காரன்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் கி பி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த மற்றும் முழுமையான உருவம் கொண்ட புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் அரசனின் தோற்றமும், சுருள் போன்ற முடியும், தெளிவான காது மடல்களின் மூலமாகவும் புத்தரின் உருவம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே நிலப்பகுதிகளில் கீழடிக்கு நிகரான கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, டெரகோட்டாஸ் என அழைக்கப்படும் சுடுமண் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அதோடு விளையாட்டுப் பொம்மைகள், வட்ட கற்கள், கற்கால கோடாரிகள் மற்றும் சுத்தியல் போன்ற கருவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளதை பார்க்கும்போது பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்று இருப்பதாகக் கூறப்படுகிறது பேட்டி – பாலமுருகன், தொல்லியல் ஆர்வலர் முருகன், விநாயகர் சிலைகளும், சிவன் வழிபாட்டு தளத்திற்கான சமணப்பள்ளி இருந்த சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விவசாயி ஒருவர் மன்னனுக்கு தானமாக எழுதிக் கொடுத்த கல்வெட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

ரோசனப்பட்டி கிராமத்தின் விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்லியல் பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதோடு, விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Urgent call for archaeological research: 10th century Buddha statues found in farmland10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்
Share
Tweet
SendShare
Previous Post

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

Next Post

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies