ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே யூடியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திங்களூர் வாரச்சந்தையில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் ஜெயபால், ஜெயராஜ், உள்ளிட்ட 4 பேரை கைது செயதனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகளை அடித்ததாகவும், அதற்கு கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்த 2 லட்சத்து 85 ஆயிரம் ரூ பாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் சிறையிலடைத்தனர்.