அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 44 சதவீதம் பேரும், டிரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஆனால், வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. நெருக்கடி அதிகமானதால் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை முன்மொழிந்தார்.
இதையடுத்து, ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், கமலா ஹாரிசுக்கு 44 சதவீதம் பேரும், டிரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா்.