கடலூரை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவநீதம் பகுதியை சேர்ந்த பத்மநாபன் அதிமுகவின் வார்டு செயலாளராக உள்ளார். இவர் பணி நிமித்தமாக புதுச்சேரியில் உள்ள பாகூர் இருளன் சந்தை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், பத்மநாபனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பத்மநாபன் மீது ஏற்கனவே கொலை உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.