திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். பருத்தி சேலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர் 2023ம் ஆண்டுக்கான கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் ஆகஸ்டு 7ல் நடக்கும் தேசிய கைத்தறி தின விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.