ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
இணையத்தில் வெளியிட்டுள்ள உத்தரவில், மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் முகப்புப் பக்கத்தில் தடை ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் எண்ணம் கடந்த 50 ஆண்டுகளாக குறைந்துவிட்டதாகவும், தற்போதைய நடவடிக்கைகளின்படி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு தடை நீக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















