ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! - ஜெகதீப் தன்கர்
Sep 13, 2026, 12:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! – ஜெகதீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 03:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு உரிமைகளை கொண்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது , தேசிய தேர்வு முகமை போன்ற நிறுவனங்களில் தலைவராக பணியமர்த்துவதற்கான தகுதி ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு தான் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜி லால் சுமன் கருத்து தெரிவித்தார்.

உடனடியாக இதனை ஆட்சேபித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இதனை அரசியலாக்கக் கூடாது என்று இந்த அவையில் பலமுறை தான் கூறியிருப்பதாகவும், உறுப்பினர் விதிகளை மீறியதோடு இந்திய அரசியலமைப்பையே காலில் போட்டு மிதித்திருப்பதாகவும் கடுமையாக கூறினார்.

நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த தன்னால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவைத் தலைவர்,  ஒரு உலகளாவிய சிந்தனைக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பகுதியின் கீழ், தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ், நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெகதீப் தன்கர், மேலும் நாட்டின் நலன், நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றிற்காகப் பங்காற்றி வருவதாகவும், அத்தகைய அமைப்பின் உறுப்பினர்களை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கவனித்ததாக தெரிவித்த அவைத்தலைவர், இது ஒரு மோசமான திட்டமிடல் என்றும் , நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு மோசமான வழிமுறை என்று கூறினார்.

இப்படி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயல்படுபவர்கள், நாட்டுக்கும், இந்திய அரசியல் அமைப்புக்கும் பெருந் தீங்கை செய்கிறார்கள் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Tags: jagdeep dhankhar in rajya sabhamallikarjun kharge jagdeep dhankharjagdeep dhankhar newsjagdeep dhankar newsjagdeep dhankhar on rsskharge vs jagdeep dhankharjagdeep dhankhar mallikarjun khargeVice-President Jagdeep Dhankharjagdeep dhankhar vs mallikarjun khargeJagdeep Dhankharmallikarjun kharge vs jagdeep dhankarJagdeep Dhankarjagdeep dhankhar on congressRSS is a global think tank! - Jagadeep Thankarjagdeep dhankhar rajya sabhajagdeep dhankhar speechjagdeep dhankhar sanjay singh
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை ரத்து! – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Next Post

திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! – ராமதாஸ்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies