திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்மையநாயக்கனூர் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி என்பவர் தமது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த சிவா மற்றும் பாலு ஆகியோர் அழகர்சாமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.