போயிங் அதிரடி முடிவு! இந்தியர்களுக்கு LUCK! - சீனர்களுக்கு "ஆப்பு"
Aug 18, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போயிங் அதிரடி முடிவு! இந்தியர்களுக்கு LUCK! – சீனர்களுக்கு “ஆப்பு”

Web Desk by Web Desk
Aug 4, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், சீனர்களை விட இந்தியர்களுக்கே அதிக வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன? இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அமெரிக்கா,சீனா,மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தப் படியாக உலகின் நான்காவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா உள்ளது.விரைவில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய விமானப் பயணிகள் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தெற்காசியாவின் விமானங்களுக்கான தேவை கணிசமாக உயரும் என்றும், 2043 ஆண்டுக்குள் 2,835 புதிய விமானங்கள் தேவைப்படும் என்றும், அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து துறையில் சர்வதேச அளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே,உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் , வரும் ஆண்டுகளில் 31,000 க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் 26000க்கும் மேற்பட்ட மெக்கானிக்கள் தேவைப்படும் என்று தம் கணிப்பை வெளிப்படுத்தி இருந்தது.

இவை தவிர, கேபின் க்ரூ,பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்கு கையாளும் நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள், பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் என ஏராளமான விமானத் துறை சார்ந்த பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ந்து வரும் நிலையில் ,இந்த வளர்ச்சிக்கு இணையான திறமையான மனித வளங்களும் தேவைப் படும். திறமையான மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கு பெரிய உள் கட்டமைப்பு,மற்றும் முறையான பயிற்சி கூடங்கள் தேவைப் படும்.

இந்நிலையில், போயிங் சுகன்யா திட்டத்தை பிரதமர் மோடி பெங்களுருவில் தொடங்கி வைத்திருக்கிறார். வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிக பெண் குழந்தைகள் நுழைவதை ஆதரிக்கும் நோக்கில் போயிங் சுகன்யா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்திருக்கிறது.

இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் முக்கியமான திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், விமானத் துறையில் உள்ள வேலைகளுக்குப் பயிற்சி பெறுவதற்கும் அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீடாக , 43 ஏக்கரில் அதிநவீன போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (BIETC) வளாகத்தைத் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் விமான ஓட்டிகளில் 15 சதவீத பேர் பெண்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டிருந்தார். இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது ஆச்சரியமான உண்மை.

கடந்த டிசம்பரில், 6,000க்கும் அதிகமான இந்திய பணியாளர்களை போயிங் நிறுவனம் வேலைக்கு அமர்த்தி இருந்தது. மேலும் 13,000 க்கும் அதிகமான இந்தியர்களை போயிங் அதன் விநியோகச் சங்கிலிகளில் பணியமர்த்தி உள்ளது.

சீனாவுடனான அமெரிக்காவின் உறவில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், போயிங் நிறுவனம், விமான பொறியியல் மற்றும் வடிவமைப்பு வளர்ச்சிக்காக இந்தியாவை நோக்கி அதிகளவில் திரும்பியுள்ளது.

வளர்ந்து வரும் இந்தியாவின் பயணிகள் விமானப் போக்குவரத்து சந்தையைத் தனக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக போயிங் நிறுவனம் கருதுகிறது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த புதன் கிழமை , போயிங் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் 58 பொறியியல் பணியிடங்கள் உட்பட 83 பணியிடங்கள் இந்தியர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்தன. ஆனால் சீனர்களுக்கு வெறும் 5 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப் பட்டிருந்ததன.

சீனாவை விட கிட்டத்தட்ட 19 மடங்கு அதிகமான பொறியியல் பதவிகளை இந்தியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

1916ம் ஆண்டிலிருந்து வலிமையாக தொடரும் சீனாவுடான போயிங்கின் நல்லுறவில் 2018-ம் ஆண்டு லயன் ஏர் விமான விபத்து மற்றும் 2019 ஆம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்துகளைத் தொடர்ந்து, சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மொஹோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 25 போயிங் 737 மேக்ஸ் விமானங்களையும், ஸ்பைஸ்ஜெட் 7 விமானங்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆகாச ஏர், 24 மேக்ஸ் விமானங்களையும் மொத்தமாக 56 போயிங் 737 மேக்ஸ் விமானம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி விமான நிறுவனமான போயிங் இந்தியா பக்கம் திரும்பி இருப்பதால், இந்தியாவின் பயணிகள் விமான போக்குவரத்து துறையில் பெரும் வளர்ச்சி நிச்சயம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Tags: Boeing action decision! LUCK for Indians! - "Wedge" for the ChineseAmerica's Boeing airline company has given more jobs to Indians than to Chinese
ShareTweetSendShare
Previous Post

கருப்பின சர்ச்சையால் திருப்பம்! : அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை முந்தும் கமலா ஹாரிஸ்!

Next Post

செல்வ வளங்களை அள்ளி வழங்கும் கேடிலியப்பர்!

Related News

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies