நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இளைஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரது வாகனத்தை சூழ்ந்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற தாங்கள் வாக்களித்ததாகவும், இந்தத் தொகுதியிலிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அந்த இளைஞர் சுட்டிக்காட்டினார். மேலும், ராகுல் காந்திக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால், சேற்றில் இறங்கியிருப்பார் என்றும் அவர் சப்தமிட்டார். இருப்பினும், இதனையடுத்து ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.