ஆடிப்பெருக்கு பண்டிகையின் சிறப்பம்சம் என்ன?
Aug 17, 2025, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடிப்பெருக்கு பண்டிகையின் சிறப்பம்சம் என்ன?

Web Desk by Web Desk
Aug 3, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடிமாதம் அம்மன் மாதம் என்று அழைக்கப் படுகிறது . இந்த ஆடி மாதத்தில் ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை என்று ஏராளமான திருவிழாக்கள் இருந்தாலும் , ஆடி பெருக்கு – முதன்மையாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி பெருக்கு ஏன் கொண்டாடப் படுகிறது ? அந்த நாளின் சிறப்பம்சம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆடி மாதத்தில் தான் சூரியன் தன் தென் திசை பயணத்தைத் தொடங்குகிறான். ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். மழைப் பொழிவால் காவிரி நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடும்.

தங்கள் வாழ்வைச் செழிப்பாக்கும் காவிரிக்கு நன்றி செலுத்தும் விதமாக, கரையோரங்களில் வாழும் மக்கள் கொண்டாடும் விழா தான் ஆடி பெருக்கு .

பெருக்கு என்றால் பெருக்குதல் என்று அர்த்தம். ஆகவே இந்நாளில் காவிரியை வணங்கினால் வாழ்வில் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆடிப்பெருக்கு, பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கப் படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

இந்நாளில், காவிரித்தாய் அனைத்து நீர்நிலைகளிலும் வியாபித்திருப்பாள். அதனால் தான் ஆடிப்பெருக்கு புண்ணிய நாளில் அனைத்து நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

ஆடிப்பெருக்கு நாளில், விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர்களின் வழக்கம் ஆகும்.

ஆடி பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப இந்நாளில் நதிகளில் நீராடி நதிக்கு பூஜை செய்து தமிழகம் எங்கும் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய வேலையைத் தொடங்குவார்கள்.

ஆடி பதினெட்டுக்கு பத்து நாட்கள் முன்னதாக, நவதானியங்களை ஒரு தாம்பாளத்தில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். வெண்மையாக முளைத்து வளர்ந்த நிலையில், அதை முளைப்பாரி என்பார்கள்.

ஆடி18 ஆம் நாள் அன்று உச்சி வேலைக்குப் பிறகு முளைபாரியை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வார்கள். ஆற்றுக்கரையில், தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். பிள்ளையாருக்கு முன் முளைப்பாரியை வரிசையாக வைப்பார்கள். பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வழிபாடு செய்வார்கள்.

வயதில் முதிய சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாரி, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை ஆற்று நீரில் விட்டு காவிரித் தாயை வணங்கி வழிபடுவார்கள்.

இப்படி வழிபட்டு காவிரி தாயின் ஆசியினை பெற்றால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆனவர்களின் கணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தமிழகப் பெண்களின் நம்பிக்கை.

அகத்தியரால் கமண்டலத்தில் சிறை பிடிக்கப்பட்ட காவிரி நதி காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டு பிரம்மகிரி மலைப்பகுதியில் ஓடியதாக புராண வரலாறு. எனவே தான் இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானை வணங்குவது வழக்கமாக இருக்கிறது.

ஆடி பெருக்கு நாளில், தொடங்கும் செயல்களும் வாங்கும் பொருட்களும் பன்மடங்கு பெருகும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

Tags: tamilnaduAdi Peruku festivalAdi Perukuhindus festival
ShareTweetSendShare
Previous Post

வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட நடிகர் மோகன்லால்!

Next Post

ஆடிப்பெருக்கு விழா கோலாகல கொண்டாட்டம்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies