பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பொன்னை பாலு, அருள், பெண் தாதா அஞ்சலை உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மகளை கடத்தி விடுவதுடன், அவர் குடும்பத்தினர் அனைவரையும் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக சதீஷ் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகறிது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.