நீதியை நிலைநாட்டுவதே அண்மையில் நடைமுறைக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களின் நோக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சண்டீகரில் குற்றவியல் சட்டம் சம்பந்தப்பட்ட இ- சேவை மையத்தைத் தொடங்கிவைத்த அவர், நம்மை அடிமைப்படுத்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டிருந்தால், நாம் எப்படி சுதந்திர நாடாக விளங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று சட்டங்களும் இந்திய நாடாளுமன்றத்தில், மக்கள் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
தண்டனை வழங்குவதைக் காட்டிலும் நீதியை நிலைநாட்டுவதே இந்த சட்டங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.