போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! - வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! – வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Aug 5, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதேவேளையில், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் ஷேக் ஹசீனா உறுதியாக இருந்ததால், அவர் பதவி விலகக் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலைமை எல்லையை மீறிச் சென்றதால், ஷேக் ஹசீனா பதவி விலகுமாறு ராணுவம் கெடு விதித்தது. மேலும், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அறிந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை சேதப்படுத்தினர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவத் தலைமைத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால், ராணுவம் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும் என்று கூறிய அவர், மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து மேற்குவங்கம், வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொல்கத்தாவில் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் முகாமிட்டுள்ளார்.

Tags: The army will investigate the death toll in the protest! - Chief of Army Staff of Bangladesh
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு! உயர்வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

டெல்லி துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்! – உச்சநீதிமன்றம்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies