போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! - வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி
Nov 4, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! – வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!

Web Desk by Web Desk
Aug 5, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதேவேளையில், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் ஷேக் ஹசீனா உறுதியாக இருந்ததால், அவர் பதவி விலகக் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலைமை எல்லையை மீறிச் சென்றதால், ஷேக் ஹசீனா பதவி விலகுமாறு ராணுவம் கெடு விதித்தது. மேலும், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அறிந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை சேதப்படுத்தினர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவத் தலைமைத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால், ராணுவம் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும் என்று கூறிய அவர், மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து மேற்குவங்கம், வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொல்கத்தாவில் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் முகாமிட்டுள்ளார்.

Tags: The army will investigate the death toll in the protest! - Chief of Army Staff of Bangladesh
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு! உயர்வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

டெல்லி துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்! – உச்சநீதிமன்றம்

Related News

கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies