போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! - வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி
Aug 8, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! – வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Aug 5, 2024, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதேவேளையில், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் ஷேக் ஹசீனா உறுதியாக இருந்ததால், அவர் பதவி விலகக் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலைமை எல்லையை மீறிச் சென்றதால், ஷேக் ஹசீனா பதவி விலகுமாறு ராணுவம் கெடு விதித்தது. மேலும், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அறிந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை சேதப்படுத்தினர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவத் தலைமைத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால், ராணுவம் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும் என்று கூறிய அவர், மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து மேற்குவங்கம், வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொல்கத்தாவில் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் முகாமிட்டுள்ளார்.

Tags: The army will investigate the death toll in the protest! - Chief of Army Staff of Bangladesh
Share
Tweet
SendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு! உயர்வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

டெல்லி துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்! – உச்சநீதிமன்றம்

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies