போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! - வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி
Jun 22, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும்! – வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா!

Murugesan M by Murugesan M
Aug 5, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அதேவேளையில், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் ஷேக் ஹசீனா உறுதியாக இருந்ததால், அவர் பதவி விலகக் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலைமை எல்லையை மீறிச் சென்றதால், ஷேக் ஹசீனா பதவி விலகுமாறு ராணுவம் கெடு விதித்தது. மேலும், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தரையிறங்கியதாகவும், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதை அறிந்த போராட்டக்காரர்கள், டாக்காவில் உள்ள அவரது தந்தையும், வங்கதேசம் உருவாக காரணமாக இருந்தவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை சேதப்படுத்தினர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ராணுவத் தலைமைத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளதால், ராணுவம் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தும் என்றும் தெரிவித்தார்.

மேலும், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ராணுவம் விசாரிக்கும் என்று கூறிய அவர், மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து மேற்குவங்கம், வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கொல்கத்தாவில் எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் முகாமிட்டுள்ளார்.

Tags: The army will investigate the death toll in the protest! - Chief of Army Staff of Bangladesh
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு! உயர்வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

டெல்லி துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம்! – உச்சநீதிமன்றம்

Related News

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies