அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!
Aug 14, 2025, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!

Web Desk by Web Desk
Aug 7, 2024, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இதற்கு முன்பு இங்கு தஞ்சமடைந்த தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

ஒரு நாட்டில் போரோ, கலவரமோ, பொருளாதார சிக்கலோ ஏற்படும் போது அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாட்டுக்குச் சென்று தஞ்சமடைவதுண்டு. அவ்வாறு வருவோர் புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மக்கள் மட்டுமின்றி அண்டைநாடுகளின் மன்னர்கள், தலைவர்கள், மத குருமார்களும் அண்டை நாட்டிலோ அல்லது அடைக்கலம் தரும் நாட்டுக்கோ செல்வதுண்டு. தமக்கு எதிராக போராட்டமோ கிளர்ச்சியோ பெரிதாக வெடிக்கும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்வார்கள். அப்படி இந்தியாவுக்கும் சிலர் வந்திருக்கிறார்கள்.

1950-களின் தொடக்கத்தில் நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மன்னர் திரிபுரவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா ஆகியோர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முதலில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப்படை மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு மன்னர் திரிபுரவன் தமது நாட்டுக்கு திரும்பிச்சென்றார்.

1959-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவும் ஏராளமான மக்களும் இமயமலை வழியாக தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர். இன்று வரை இங்குதான் அவர்கள் வசிக்கின்றனர். திபெத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது ஒன்றும் புதிதல்ல. 1975-ஆம் ஆண்டு அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்ட போது ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. 6 ஆண்டுகள் இங்கு வசித்த அவர், அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வங்கதேசத்துக்குச் சென்றார்.

1980-களில் இலங்கையில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ் போராளிக் குழுக்களைச் சேர்ந்த பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் போன்றவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இதில் மிக நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருக்க அனுமதிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.

2015-ஆம் ஆண்டு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கஃபூர் படகு மூலம் தப்பி இந்தியாவுக்கு வந்தார். எனினும் அவருக்கு அடைக்கலம் தர மறுத்து மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பியது இந்தியா.

Tags: Whose refuge? Those who have taken refuge in India so far!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதன்முறை! – சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!

Next Post

கைத்தறிகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies