அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!
Mar 20, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இதற்கு முன்பு இங்கு தஞ்சமடைந்த தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

ஒரு நாட்டில் போரோ, கலவரமோ, பொருளாதார சிக்கலோ ஏற்படும் போது அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாட்டுக்குச் சென்று தஞ்சமடைவதுண்டு. அவ்வாறு வருவோர் புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மக்கள் மட்டுமின்றி அண்டைநாடுகளின் மன்னர்கள், தலைவர்கள், மத குருமார்களும் அண்டை நாட்டிலோ அல்லது அடைக்கலம் தரும் நாட்டுக்கோ செல்வதுண்டு. தமக்கு எதிராக போராட்டமோ கிளர்ச்சியோ பெரிதாக வெடிக்கும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்வார்கள். அப்படி இந்தியாவுக்கும் சிலர் வந்திருக்கிறார்கள்.

1950-களின் தொடக்கத்தில் நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மன்னர் திரிபுரவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா ஆகியோர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முதலில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப்படை மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு மன்னர் திரிபுரவன் தமது நாட்டுக்கு திரும்பிச்சென்றார்.

1959-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவும் ஏராளமான மக்களும் இமயமலை வழியாக தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர். இன்று வரை இங்குதான் அவர்கள் வசிக்கின்றனர். திபெத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது ஒன்றும் புதிதல்ல. 1975-ஆம் ஆண்டு அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்ட போது ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. 6 ஆண்டுகள் இங்கு வசித்த அவர், அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வங்கதேசத்துக்குச் சென்றார்.

1980-களில் இலங்கையில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ் போராளிக் குழுக்களைச் சேர்ந்த பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் போன்றவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இதில் மிக நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருக்க அனுமதிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.

2015-ஆம் ஆண்டு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கஃபூர் படகு மூலம் தப்பி இந்தியாவுக்கு வந்தார். எனினும் அவருக்கு அடைக்கலம் தர மறுத்து மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பியது இந்தியா.

Tags: Whose refuge? Those who have taken refuge in India so far!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதன்முறை! – சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!

Next Post

கைத்தறிகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies