அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!
Jun 25, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இதற்கு முன்பு இங்கு தஞ்சமடைந்த தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

ஒரு நாட்டில் போரோ, கலவரமோ, பொருளாதார சிக்கலோ ஏற்படும் போது அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாட்டுக்குச் சென்று தஞ்சமடைவதுண்டு. அவ்வாறு வருவோர் புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மக்கள் மட்டுமின்றி அண்டைநாடுகளின் மன்னர்கள், தலைவர்கள், மத குருமார்களும் அண்டை நாட்டிலோ அல்லது அடைக்கலம் தரும் நாட்டுக்கோ செல்வதுண்டு. தமக்கு எதிராக போராட்டமோ கிளர்ச்சியோ பெரிதாக வெடிக்கும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்வார்கள். அப்படி இந்தியாவுக்கும் சிலர் வந்திருக்கிறார்கள்.

1950-களின் தொடக்கத்தில் நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மன்னர் திரிபுரவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா ஆகியோர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முதலில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப்படை மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு மன்னர் திரிபுரவன் தமது நாட்டுக்கு திரும்பிச்சென்றார்.

1959-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவும் ஏராளமான மக்களும் இமயமலை வழியாக தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர். இன்று வரை இங்குதான் அவர்கள் வசிக்கின்றனர். திபெத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது ஒன்றும் புதிதல்ல. 1975-ஆம் ஆண்டு அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்ட போது ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. 6 ஆண்டுகள் இங்கு வசித்த அவர், அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வங்கதேசத்துக்குச் சென்றார்.

1980-களில் இலங்கையில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ் போராளிக் குழுக்களைச் சேர்ந்த பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் போன்றவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இதில் மிக நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருக்க அனுமதிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.

2015-ஆம் ஆண்டு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கஃபூர் படகு மூலம் தப்பி இந்தியாவுக்கு வந்தார். எனினும் அவருக்கு அடைக்கலம் தர மறுத்து மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பியது இந்தியா.

Tags: Whose refuge? Those who have taken refuge in India so far!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முதன்முறை! – சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!

Next Post

கைத்தறிகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை : 11 பேர் வழக்குப்பதிவு!

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies