அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!
Aug 10, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 08:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இதற்கு முன்பு இங்கு தஞ்சமடைந்த தலைவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

ஒரு நாட்டில் போரோ, கலவரமோ, பொருளாதார சிக்கலோ ஏற்படும் போது அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாட்டுக்குச் சென்று தஞ்சமடைவதுண்டு. அவ்வாறு வருவோர் புலம்பெயர்ந்தவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மக்கள் மட்டுமின்றி அண்டைநாடுகளின் மன்னர்கள், தலைவர்கள், மத குருமார்களும் அண்டை நாட்டிலோ அல்லது அடைக்கலம் தரும் நாட்டுக்கோ செல்வதுண்டு. தமக்கு எதிராக போராட்டமோ கிளர்ச்சியோ பெரிதாக வெடிக்கும் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்வார்கள். அப்படி இந்தியாவுக்கும் சிலர் வந்திருக்கிறார்கள்.

1950-களின் தொடக்கத்தில் நேபாளத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் மன்னர் திரிபுரவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா ஆகியோர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முதலில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் இந்திய விமானப்படை மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஓராண்டுக்குப் பிறகு மன்னர் திரிபுரவன் தமது நாட்டுக்கு திரும்பிச்சென்றார்.

1959-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பு காரணமாக திபெத் மதத் தலைவர் தலாய் லாமாவும் ஏராளமான மக்களும் இமயமலை வழியாக தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர். இன்று வரை இங்குதான் அவர்கள் வசிக்கின்றனர். திபெத்தில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய அரசாங்கம் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைவது ஒன்றும் புதிதல்ல. 1975-ஆம் ஆண்டு அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்ட போது ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. 6 ஆண்டுகள் இங்கு வசித்த அவர், அவாமி லீக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வங்கதேசத்துக்குச் சென்றார்.

1980-களில் இலங்கையில் ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, தமிழ் போராளிக் குழுக்களைச் சேர்ந்த பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் போன்றவர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இதில் மிக நீண்டகாலம் இந்தியாவில் தலைமறைவாக இருக்க அனுமதிக்கப்பட்டவர் வரதராஜ பெருமாள்.

2015-ஆம் ஆண்டு மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கஃபூர் படகு மூலம் தப்பி இந்தியாவுக்கு வந்தார். எனினும் அவருக்கு அடைக்கலம் தர மறுத்து மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பியது இந்தியா.

Tags: Whose refuge? Those who have taken refuge in India so far!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் முதன்முறை! – சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!

Next Post

கைத்தறிகள் நமது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்து – 3 பேர் காயம்!

நெல் மற்றும் கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

காவிரியில் நீர் திறப்பு தொடர்பான தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணை!

உத்தரப்பிரதேசத்தில் கனமழை – கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு!

கைகொடுக்காத தென்மேற்கு பருவமழை – கைகொடுக்கும் கிருஷ்ணா நதிநீர்!

இபிஎஸ்-ஸின் தவறான முடிவால் கோடிகளை இழந்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல்!

பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது!

தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் தேச உணர்வும், ஒரே சிந்தனையும் வரவேண்டும் – நயினர் நாகேந்திரன்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies