இந்தியாவில் முதன்முறை! - சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!
Aug 13, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் முதன்முறை! – சென்னையில் அமையும் டபுள் டக்கர் மெட்ரோ!

Web Desk by Web Desk
Aug 6, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு மெட்ரோ மேம்பாலம் விரைவில் அமைய உள்ளது. டபுள் டக்கர் மெட்ரோ எப்படி? எங்கு? அமைக்கப்படுகிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்!

சென்னையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப, பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் தற்போது பேரூதவியாக இருந்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இரு தடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன, இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தை அடுத்து, மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் உருவாகி வருகிறது.

அதன்படி மூன்றாவது வழித்தடத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், நான்காம் வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5ஆம் வழித்தடத்தில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செல்லும் நான்காவது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் ஐந்தாவது வழித்தடமும் சென்னை ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இணைகிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் இதுவரை சாத்தியப்படாத, சவாலான இரண்டடுக்கு மெட்ரோ பாலமாக அமைய உள்ளது..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் மேம்பாலம் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இந்த புள் டக்கர் மெட்ரோ பாலத்தில் ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரம்பாக்கம் ஆகிய நான்கு ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்திற்கு நான்காம் வழித்தடமும் 70 அடி உயரத்தில் ஐந்தாம் வழித்தடமும் ஒன்றின் மேல் ஒன்றாக ஒரே தூணில் அமைகிறது. டபுள் டக்கர் மெட்ரோ பாலத்திற்கு மொத்தம் 608 கார்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது 64 கார்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள காடர்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மெட்ரோ பணிகளினால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள், போக்குவரத்து இடையூறுகள் தற்போது ஏற்பட்டாலும், வரும் காலங்களில் பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் பயணிக்க மெட்ரோ ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Tags: First time in India! - Double Tucker Metro to be built in Chennai!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் என்ன நடக்கும்?: 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராணுவ ஆட்சி!

Next Post

அடைக்கலம் யாருக்கு? இந்தியாவில் இதுவரை தஞ்சமடைந்தவர்கள்!

Related News

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies