சிவகங்கையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 72 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மதகுபட்டி கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத 72 ஆயிரத்து 730 ரூபாயை கைப்பற்றிய அதிகாரிகள் சார்பதிவாளராக பணியாற்றிவரும் முத்துராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.