நெட் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கல்லூரி உதவி பேராசிரியர், பிஎச்டி சேர்க்கைக்கான நெட் தேர்வு கடந்த ஜூன் 18-இல் நடைபெற்றது.
இதனிடையே, நீட் தேர்வு முறைகேடு வெளியானதால், நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வினாத்தாள் கசிவைக் காரணம் காட்டி, நெட் தேர்வை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த தருணத்தில் மனுவை ஏற்றால், மாணவர்களுக்கு நிச்சயமற்ற சூழல் உருவாகி விடும் என்றும், இதனால் குளறுபடி ஏற்படும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, 9 லட்சம் மாணவர்களின் நலன் கருதி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.