விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள டைனோபார்க் பூங்காவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற விசாகப்பட்டினம் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக அங்கிருந்து வெளியேறும் அடர்ந்த கரும்புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.