புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது.
வரும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ரயில்வேஸ், குஜராத், மும்பை, ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர், ஹைதராபாத், பரோடா, டின்சிஏ பிரெசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படவுள்ளது.