நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றினார்.
78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஏராளமான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.