மகளின் மரணத்திற்கு இழப்பீடு பெற்றால் அது அவரை அவமதிப்பது போலாகும் என கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது பெண் மருத்துவர் கடந்த 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகளின் மரணத்திற்கு இழப்பீடு பெற பெண் மருத்துவரின் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இழப்பீடு பெறுவது தனது மகளை அவமதிப்பதற்கு சமம் எனவும் நீதியை தவிர வேறு எதுவும் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது மகளுக்காக போராடும் அனைவரையும் மகன்களாகவும், மகள்களாகவும் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.