பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!
Oct 3, 2025, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 17, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டம் மேற்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர். இதில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலியல் வன்முறைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபதி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 ஆண்டுகால தண்டனை சட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறனார்.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், பாலியல் வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: Kolkattakolkatta lady doctor murder issuechennai doctors strike
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை திறந்து வைக்கிறார்!

Next Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி!

Related News

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies