பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!
Jun 17, 2025, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் மருத்துவர் கொலை விவகாரம் : சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 17, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டம் மேற்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர். இதில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலியல் வன்முறைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபதி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 ஆண்டுகால தண்டனை சட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறனார்.

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், பாலியல் வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: Kolkattakolkatta lady doctor murder issuechennai doctors strike
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை திறந்து வைக்கிறார்!

Next Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி!

Related News

முதலமைச்சர் ஸ்டாலினின் தமிழ்ப்பற்று தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் : எச்.ராஜா விமர்சனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies