ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட தலை சிறந்த போர் வீரர்களில் ஒருவர் மாவீரர் ஒண்டி வீரன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட தலை சிறந்த போர் வீரர்களில் ஒருவரும், பூலித்தேவரின் படைத் தளபதியாக விளங்கியவருமான, மாவீரர் ஒண்டி வீரன் அவர்களது நினைவு தினம் இன்று. மாவீரர் ஒண்டி வீரன் அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.