புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை முழுநேரமாக இயக்கக் கோரியும், இரவு நேரத்தில் மருத்துவர்களை பணியில் அமர்த்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் காமாட்சி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீர்கேடுகள் குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவமனையை சீர் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.