ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை பெரம்பூரில் கடந்த மாதம் 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி கிருஷ்ணனும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. கிருஷ்ணனுடன், திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா, வெளிநாட்டிற்கு செல்வதுற்கு முன் தொலைபேசியில் பேசியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்நிலையில், கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேத்தின் பேரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அடுத்தக்கட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.