இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற அவர், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டினை வாஷிங்டனில் சந்தித்தார்.
தொடர்ந்து, இந்தியா- அமெரிக்கா வியூக ரீதியிலான கூட்டமைப்பு மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்று, இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டுமானால், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு இன்றியமையாதது என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.