குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வதோதராவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அஜ்வா மற்றும் பிரதாப்புரா அணைகளில் இருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.