நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்த இரண்டு மாணவர்கள்!
Jun 17, 2025, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்த இரண்டு மாணவர்கள்!

Web Desk by Web Desk
Aug 28, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்குடி அருகே அடிப்படை வசதி இல்லாத கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவரும் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து இருவரும் பயின்ற நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். நாகராஜுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டிலும், ரவிக்கு அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழ் ஜனம் செய்தியாளரிடம் பேசிய மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ், ஆசிரியர்களின் ஊக்கத்தினால் நீட்தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். மேலும், மருத்துவம் படித்து மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றுவேன் என அவர் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து பேசிய நாகராஜின் தாய் விஜயா, நாகராஜ் பள்ளிக்கு புறப்படும் முன், வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தான் செல்வதாக கூறினர். பள்ளி விடுமுறை நாட்களில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டே நீட் தேர்வுக்கு படித்து வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மற்றொரு அரசு பள்ளி மாணவர் ரவி, தமது படிப்புக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி செய்ததாக தெரிவித்தார். மேலும், ஏழ்மையில் உள்ளவர்கள் படிப்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன் எனக்கூறிய அவர், மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி பயில வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து பேசிய ரவியின் தந்தை உடையப்பன், ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தங்கள் கிராமத்திற்கு தேவையான பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் இருந்து வந்து அரசுப் பள்ளியில் பயின்ற 2 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி தெரிவித்தார். அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் இருந்து அரசு பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும் பிற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறினார்.

நீட் தேர்வில் பெற வேண்டி 2 மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்ததாக இதனை வகுப்பு ஆசிரியர் அந்தோணி தெரிவித்தார். இரண்டு மாணவர்களும் ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி நீட் தேர்வில் வெற்றி பெற்றதாக கூறிய அவர், இருவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: Two students who achieved medical dreams through NEET exam!
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு! : தேசிய ஜனநாயக கூட்டணி பலம் 112 ஆக அதிகரிப்பு!

Next Post

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் அதிகரிப்பு!

Related News

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு!

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies