இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த சியோமி நிறுவனம்!
Sep 18, 2025, 12:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த சியோமி நிறுவனம்!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாம்சங்கின் கோட்டை படிப்படியாக குறைந்து வருகிறது. ஏறக்குறைய ஆறு காலாண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் சியோமி தென்கொரியாவின் சாம்சங்கை விஞ்சி, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் Xiaomi இன் ஏற்றுமதி ஆண்டுதோறும் 24 சதவீதம் அதிகரித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் 4 சதவீத வளர்ச்சியைக் காணும் Vivo, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சாம்சங்கின் ஏற்றுமதி 8 சதவீதம் சரிந்ததால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.  மற்றைய சீன பிராண்டுகளான Realme மற்றும் Oppo முறையே 12 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அளவு பங்குகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

சீன போட்டியாளர்களான Xiaomi மற்றும் Vivo ஆகியவை சிறந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருக்கு சவால் விடுகின்றன. இது சாம்சங்கின் சந்தைப் பங்கை 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சியடைய வழிவகுத்திருக்கிறது.

இது குறித்து, Xiaomi இந்தியாவின் தலைவர் பி முரளிகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை மீட்டெடுப்பது பெருமைப்படும் ஒரு சாதனை என்றாலும், தங்கள் முன்னுரிமை தரவரிசைக்கு அப்பாற்பட்டவை என்றும், இந்தியாவைப் பற்றிய ஆழமான புரிதலும் தங்கள் தேர்ந்த தொழில்நுட்ப வலிமையும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாம் சங்கின் இந்த வீழ்ச்சிக்கு பிராண்ட் மீதான ஈர்ப்பு குறைந்தது, சீன பிராண்டுகளின் தீவிர போட்டி மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடன் ஏற்பட்ட சிக்கல் ஆகியவை சாம்சங்கின் சரிவுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே சாம்சங் தனது விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மூலம் சந்தையில் முன்னணியில் இருந்து வந்தது. அதே நேரத்தில் Xiaomi மற்றும் Vivo குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்கள் ஆதிக்கத்தை வலிமையாக செலுத்தி வந்தன.

மலிவு விலை போன்களுக்கு பெயர் பெற்ற Xiaomi, இப்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரீமியம் கைபேசி சந்தையிலும் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும் 10,000 ரூபாய்க்கு கீழுள்ள ஸ்மார்ட் போன் சந்தையில் சாம்சங் வெறும் 3 சதவீதம் மட்டும் வைத்துள்ளது. 30000 ரூபாய்க்கு கீழுள்ள ஸ்மார்ட் போன் வரிசையில் சாம்சங் மிக குறைந்த செயல் திறன் கொண்ட போன்களையே வைத்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் ஆப்பிளின் எழுச்சி மற்றும் பிரீமியம் பிரிவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் பிரிவிலும் சாம் சங்கை திக்கு முக்காட வைத்திருக்கிறது.

இந்த வீழ்ச்சியில் இருந்து சாம் சங் மீண்டெழ அதிக காலமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளான Xiaomi, Vivo, Oppo, Realme, Transsion மற்றும் Motorola ஆகியவற்றின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: oppo phoneXiaomi beat samsungsouth KoreaSamsung smart phoneChina's Xiaomivivo
ShareTweetSendShare
Previous Post

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது!

Next Post

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

Related News

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies