இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த சியோமி நிறுவனம்!
Aug 3, 2025, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த சியோமி நிறுவனம்!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாம்சங்கின் கோட்டை படிப்படியாக குறைந்து வருகிறது. ஏறக்குறைய ஆறு காலாண்டுகளுக்குப் பிறகு, சீனாவின் சியோமி தென்கொரியாவின் சாம்சங்கை விஞ்சி, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் Xiaomi இன் ஏற்றுமதி ஆண்டுதோறும் 24 சதவீதம் அதிகரித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் 4 சதவீத வளர்ச்சியைக் காணும் Vivo, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சாம்சங்கின் ஏற்றுமதி 8 சதவீதம் சரிந்ததால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.  மற்றைய சீன பிராண்டுகளான Realme மற்றும் Oppo முறையே 12 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அளவு பங்குகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

சீன போட்டியாளர்களான Xiaomi மற்றும் Vivo ஆகியவை சிறந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளருக்கு சவால் விடுகின்றன. இது சாம்சங்கின் சந்தைப் பங்கை 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சியடைய வழிவகுத்திருக்கிறது.

இது குறித்து, Xiaomi இந்தியாவின் தலைவர் பி முரளிகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை மீட்டெடுப்பது பெருமைப்படும் ஒரு சாதனை என்றாலும், தங்கள் முன்னுரிமை தரவரிசைக்கு அப்பாற்பட்டவை என்றும், இந்தியாவைப் பற்றிய ஆழமான புரிதலும் தங்கள் தேர்ந்த தொழில்நுட்ப வலிமையும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சாம் சங்கின் இந்த வீழ்ச்சிக்கு பிராண்ட் மீதான ஈர்ப்பு குறைந்தது, சீன பிராண்டுகளின் தீவிர போட்டி மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடன் ஏற்பட்ட சிக்கல் ஆகியவை சாம்சங்கின் சரிவுக்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாகவே சாம்சங் தனது விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மூலம் சந்தையில் முன்னணியில் இருந்து வந்தது. அதே நேரத்தில் Xiaomi மற்றும் Vivo குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்கள் ஆதிக்கத்தை வலிமையாக செலுத்தி வந்தன.

மலிவு விலை போன்களுக்கு பெயர் பெற்ற Xiaomi, இப்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரீமியம் கைபேசி சந்தையிலும் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும் 10,000 ரூபாய்க்கு கீழுள்ள ஸ்மார்ட் போன் சந்தையில் சாம்சங் வெறும் 3 சதவீதம் மட்டும் வைத்துள்ளது. 30000 ரூபாய்க்கு கீழுள்ள ஸ்மார்ட் போன் வரிசையில் சாம்சங் மிக குறைந்த செயல் திறன் கொண்ட போன்களையே வைத்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் ஆப்பிளின் எழுச்சி மற்றும் பிரீமியம் பிரிவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுளின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் பிரிவிலும் சாம் சங்கை திக்கு முக்காட வைத்திருக்கிறது.

இந்த வீழ்ச்சியில் இருந்து சாம் சங் மீண்டெழ அதிக காலமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளான Xiaomi, Vivo, Oppo, Realme, Transsion மற்றும் Motorola ஆகியவற்றின் ஒட்டுமொத்த சந்தை பங்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: China's Xiaomivivooppo phoneXiaomi beat samsungsouth KoreaSamsung smart phone
ShareTweetSendShare
Previous Post

உத்தர பிரதேசத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலை சிக்கியது!

Next Post

ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies