அரசு. ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க உத்தரகாண்ட் அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் 30-ம் தேதி, 1970 ஜூலை 25-ம் தேதி, 1980 அக்டோபர் 28-ம் தேதி ஆகிய நாட்களில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது.
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் கடந்த ஜூலை 9-ம் தேதி பிறப்பித்த அலுவலக குறிப்பாணையில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுதுத ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநில அரசுகள், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்கும் கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், உத்தரகாண்ட் அரசு. ஊழியர்களை ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் வர்தன் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.