ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கருத்து தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் செர்னோபியோ நகரில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சந்தித்து பேசினார். அப்போது போர் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நம்பிக்கை தெரிவித்தார்.