அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் - மாணவன் சுட்டதில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பலி!
Aug 6, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் – மாணவன் சுட்டதில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பலி!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது கோல்ட் கிரேவின் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார்.  கோல்ட் கிரே யின் தாயும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் பலமுறை வீட்டு வன்முறை குற்றங்களுக்காக கைதானவர் என்றும் தெரிய வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 14 வயதுடைய கோல்ட் கிரே என்னும் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 மாணவர்கள் உட்பட 2 ஆசிரியர்கள் கொல்லப் பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனை கைது செய்துள்ள ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின் இயக்குனர் கிறிஸ் ஹோசி, கோல்ட் கிரே மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இவ்வூரில் உள்ள பள்ளிகளில்  துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என  ஆன்லைன் அச்சுறுத்தல்கள் பல வந்துள்ளன. அப்போது கோல்ட் கிரே சட்ட அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

துப்பாக்கிகளின் புகைப்படங்களை உள்ளடக்கிய குறிப்புக்களுடன் வந்த மிரட்டல் பற்றி கோல்ட் கிரேயின் தந்தையிடம் நடத்திய தீவிர விசாரணையில் வேட்டையாடும் துப்பாக்கி வீட்டில்உள்ளதாக தெரிவித்திருக்கிறார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமலாக்கத் துறையினர் கோல்ட் கிரேயை அப்போது கைது செய்யவில்லை.

கடந்த கிறிஸ்துமஸ் பரிசாக தன் மகனுக்கு AR-15 வகை அரை தானியங்கி துப்பாக்கியை வாங்கி கொடுத்திருக்கிறார் கோல்ட் கிரேயின் தந்தை கொலின் கிரே. அந்த துப்பாக்கியைக் கொண்டு, பள்ளியில் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறான் கோல்ட் கிரே.

தனது மகனுக்குத் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதித்தது உட்பட நான்கு தன்னிச்சையான ஆணவக் கொலைகள், இரண்டு இரண்டாம் நிலை கொலைகள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டுக் கொடுமைகள் உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொலின் கிரே கைது செய்யப் பட்டுள்ளார். இரண்டாம் நிலை கொலை குற்றத்துக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில் , துப்பாக்கி சூடு நடத்திய கோல்ட் கிரேயின் தாயான 43 வயதான மார்சி ,வீட்டு வன்முறை, போதைப்பொருள் வைத்திருந்தல், சொத்து சேதம் மற்றும் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து மீறல்கள் உட்பட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைதாகி இருக்கிறார்.

மேலும் அவர் பயன்படுத்திய வாகனம் வாங்குவதில் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தங்கள் குழந்தை யாரையாவது சுட்டுக் கொன்றால், பெற்றோர்கள் பொதுவாக குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் என்றாலும், எதிர்காலத்தில் பெற்றோரும் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

கடந்த நவம்பரில் வர்ஜீனியாவைச் சேர்ந்த தேஜா டெய்லருக்கு, அவரது ஆறு வயது மகன் ஜனவரி மாதம் தனது ஆசிரியரை சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த 385வது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு மட்டும் 384 வெகுஜன துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. அதன் விளைவாக 11,500 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

Tags: americashootingGeorgia high schoolColt Gray arrest
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை பாதாள காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Next Post

மதுரை சிம்மக்கல் சந்தையில் வளர்ப்பு பிராணிகள் விற்பனை – ஆர்வத்துடன் வாங்கி சென்ற வாடிக்கையாளர்கள்!

Related News

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கிய செய்தி நாளிதழ் நகல் வெளியீடு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

கோவை : காவல் நிலையத்தில் 50 வயதுடைய நபர் தற்கொலை!

மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை : திமுக பிரமுகர் பேரன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies