மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஷீல்டா தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ள குடியரி ஷெரீப் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கிருந்த ஏராளமான கடைகள் தீக்கிரையாகின.
நல்வாய்ப்பாக தீப்பிடித்தபோது ரயில் ஏதும் வராததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.