தூத்துக்குடி மாவட்ட சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 9 பேர் காயமடைந்தனர்.
பேரூரணியில் அமைந்துள்ள மாவட்ட சிறையில் கைதிகள் சந்தனகுமார் மற்றும் ஜெயச்சந்திரன் இடையே உறங்குவற்கு இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் இரு பிரிவாக கைதிகளிடையே மோதலாக மாறியதில், 9 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 46 பேர் மீது தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதிகளிடையே மோதல் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி பழனி விசாரணை நடத்தினார்.