பருவநிலை நிதியத்திற்கு நிதியை அள்ளிக்கொடுத்த இந்தியா - கிள்ளிக்கொடுத்த அமெரிக்கா!
Aug 22, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவநிலை நிதியத்திற்கு நிதியை அள்ளிக்கொடுத்த இந்தியா – கிள்ளிக்கொடுத்த அமெரிக்கா!

Web Desk by Web Desk
Sep 10, 2024, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல வளர்ந்த நாடுகளின் பங்களிப்பை விடவும், இந்தியா 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை பருவநிலை நிதியத்துக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரிட்டனைத் தலைமையிடமான கொண்ட சிந்தனைக் குழு, Zurich Climate Resilience Alliance என்ற சூரிச் பருவநிலை மீட்பு சேர்ந்து காலநிலை நிதியம் பற்றிய பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

2022 ஆம் ஆண்டில் நார்வே, பிரான்ஸ், லக்சம்பர்க், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பின்லாந்து ஆகிய 12 வளர்ந்த நாடுகள் மட்டுமே சர்வதேச காலநிலை நிதியில் நியாயமான பங்கை வழங்கியுள்ளன என்று இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

பருவநிலை நிதியில் குறிப்பிடத்தக்க இடைவெளி வருவதற்கான காரணம், அமெரிக்கா தனது நியாயமான பங்களிப்பை வழங்காமல் இருப்பதாகும் என்றும் இந்த குழுவின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் காலநிலை நிதி விஷயத்தில் குறைவாகவே செயல்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

அபிவிருத்தி வங்கிகள் மற்றும் காலநிலை நிதிகளுக்கான பலதரப்பு பங்களிப்புகள் மூலம் வளரும் நாடுகளுக்கு கணிசமான காலநிலை நிதியை வழங்கிய முதல் முப்பது இரண்டாம் நிலை நாடுகளையும் இந்த ஆய்வறிக்கை அடையாளம் காட்டியுள்ளது.

இந்த பட்டியலில்,முன்னாள் பொருளாதார நாடுகளான போலந்து மற்றும் ரஷ்யா,உட்பட 1992 ஆம் ஆண்டு முதல் உயர் வருமான அந்தஸ்தை அடைந்த நாடுகளான, சிலி, குவைத், சவுதி அரேபியா மற்றும் தென் கொரியால பிரேசில் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நடுத்தர வருமான நாடுகளான சீனா, இந்தியா உட்பட இந்தோனேசியா, மெக்சிகோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) மூலம் பிற வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதியாக இந்தியா 1.287 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.

இது கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சில வளர்ந்த நாடுகளின் பங்களிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய பெரிய தொகையாகும். அதே நேரத்தில் சீனா 2.52 பில்லியன் அமெரிக்க டாலர்களை காலநிலை நிதியாக வழங்கியுள்ளது.

2009ம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த COP15 மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உதவும் வகையில் 2020ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த வளர்ந்த நாடுகள் கூட்டாக வழங்குவதாக உறுதியளித்திருந்தன.

இருப்பினும், இந்த இலக்கு முழுமையாக எட்டப்படாமல், குறிப்பிடத்தக்க நிதி இடைவெளிக்கு வழிவகுத்துள்ளது என்றும், இந்த பற்றாக்குறை வளரும் நாடுகளில் நம்பிக்கையைச் சிதைத்து, காலநிலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கையை ஆதரிப்பதற்காக, 2025ம் ஆண்டு முதல், வளர்ந்த நாடுகள் ஆண்டுதோறும் திரட்ட வேண்டிய தொகையைக் குறிக்கும் புதிய கூட்டு அளவுகோல் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் நவம்பரில் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஐநா காலநிலை மாநாட்டில் இந்த அளவுகோல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2050ம் ஆண்டுக்கு முன்பே பணக்கார நாடுகள் தங்கள் கார்பன் கால்தடத்தை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்றும், 2025க்குப் பிந்தைய உலகளாவிய பருவநிலை நிதி இலக்கான புதிய கூட்டு அளவுகோலில் உறுதியான மற்றும் உண்மையான முன்னேற்றத்தை இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் பிரதமர் மோடி ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Indiaamericaclimate changeZurich Climate Resilience AllianceUSD 1.28 billioninternational climate forum
ShareTweetSendShare
Previous Post

தெற்கு காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 40 பேர் பலி!

Next Post

ஓடும் பேருந்தில் திடீரென கழன்ற முன்சக்கரம் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Related News

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

Load More

அண்மைச் செய்திகள்

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

“உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்எல்ஏ – வீடியோ வைரல்!

வரதட்சணை வழக்கு – ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் – இருளில் ஏவுகணை அமைப்பை சரி செய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies