டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இல்லம் முன்பு பாஜகவை சேர்ந்த சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது வர்ஜீனியாவில் மக்களிடையே உரையாற்றிய அவர், சீக்கிய சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லம் முன்பு பாஜகவை சேர்ந்த சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தனது கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.