கன்னியாகுமரியில் மாற்றுத்திறனாளி போல நடித்து யாசகம் பெறும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மாற்றுத்திறனாளி போல நடித்து சுற்றுலா பயணிகளிடம் ஒருவர் யாசகம் பெற்றார். இதனை சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.