பன்முகப் படைப்பாளி மகாகவி பாரதியார் நினைவை போற்றுவோம்!
Sep 10, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்முகப் படைப்பாளி மகாகவி பாரதியார் நினைவை போற்றுவோம்!

Murugesan M by Murugesan M
Sep 11, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மண்ணுயிரை தன்னுயிரைப் போல் நினைத்து அன்பு செய்யுங்கள் என்ற வாக்கிற்கு ஏற்று விளக்கமாக வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று. நாடு போற்றும் மகா கவிஞனாக, பன்முகப் படைப்பாளியாக திகழ்ந்த மகாகவி பாரதியார் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

”ஆடுவோமே பள்ளு பாடுவோமே”
”வந்தே மாதரம் என்போம்”
”செந்தமிழ் நாடென்னும் போதினிலே”
”தாயின் மணிக்கொடி பாரீர் “

என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு எண்ணற்ற பாடல்களை பாடி நாட்டு மக்களின் மனதில் விடுதலை உணர்வை தூண்டியதில் பெரும்பங்கு மகாகவிக்கு மட்டுமே உண்டு.

சுப்பிரமணியன் எனும் பெயரில் சின்னச்சாமி, லட்சுமி அம்மையார் மகனாக அறியப்பட்ட சிறுவன், தன் பதினொன்றாம் வயதிலேயே பாரதி என அனைவராலும் பாராட்டப்பட்டார். பாரதி முதல் மகாகவியாக உருவெடுத்தது வரையிலான காலகட்டம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு என பொதுநலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகாகவி பாரதியார் தன் பேச்சால், எழுத்தால், செயலால் இன்றளவும் நாட்டு மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.

கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், இதழியலாளர், அரசியல்வாதி, சமூக தீர்திருத்தவாதி என மகாகவி பாரதியார் பயணித்த பரிணாமங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

இந்திய விடுதலை, உலக வரலாறு, மானுடம் குறித்த பாரதியாரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இளம் தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.

”எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேணும் தெளிந்த நல்லறிவு வேண்டும் “ என்ற வரிகளுக்கு ஏற்ப தான் கொண்ட உறுதியாலும், தன்னம்பிக்கையாளும் தடைகளை தகர்த்தெறிந்தார் மகாகவி பாரதியார்.

தாய்மொழி தமிழ் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்த பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணொம் என கவி புனைந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரஞ்ச், ஆங்கிலத்தில் தனிப் புலமை பெற்றவராக திகழ்ந்த பாரதியார், அம்மொழிகளில் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்தார்.

எழுத்திற்கும், பேச்சிற்கும் இடைவெளியில்லாத வாழ்க்கையை வாழ்ந்த பாரதியார். தான் பிறந்த சமூகத்திலும், வாழ்ந்த சமூகத்திலும் நிலவிய அனைத்துவிதமான மூட நம்பிக்கைகளை எதிர்த்து அனைவரும் சமம் என்பதை துணிச்சலோடு முழங்கினார்.

தமிழ், கவிதை, எளிமை, மனிதம், ஈரமும் இணைந்தவராக தன்னை கட்டமைத்துக் கொண்ட மகாகவி பாரதி, தன் முப்பத்தி ஒன்பதாம் வயதில் உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றாலும் உலக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

Tags: Let's honor the memory of Mahakavi Bharatiyara multifaceted creator!C. Subramania Bharati Indian writer and poet
Share
Tweet
SendShare
Previous Post

மாற்றுத்திறனாளி போல நடித்து யாசகம் பெறும் நபர்!

Next Post

இமாச்சலில் நீடிக்கும் பதற்றம்! : சர்ச்சைக்குரிய மசூதியை உரிமை கோரும் வக்ஃப்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies