பன்முகப் படைப்பாளி மகாகவி பாரதியார் நினைவை போற்றுவோம்!
Jul 11, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பன்முகப் படைப்பாளி மகாகவி பாரதியார் நினைவை போற்றுவோம்!

Murugesan M by Murugesan M
Sep 11, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மண்ணுயிரை தன்னுயிரைப் போல் நினைத்து அன்பு செய்யுங்கள் என்ற வாக்கிற்கு ஏற்று விளக்கமாக வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று. நாடு போற்றும் மகா கவிஞனாக, பன்முகப் படைப்பாளியாக திகழ்ந்த மகாகவி பாரதியார் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

”ஆடுவோமே பள்ளு பாடுவோமே”
”வந்தே மாதரம் என்போம்”
”செந்தமிழ் நாடென்னும் போதினிலே”
”தாயின் மணிக்கொடி பாரீர் “

என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு எண்ணற்ற பாடல்களை பாடி நாட்டு மக்களின் மனதில் விடுதலை உணர்வை தூண்டியதில் பெரும்பங்கு மகாகவிக்கு மட்டுமே உண்டு.

சுப்பிரமணியன் எனும் பெயரில் சின்னச்சாமி, லட்சுமி அம்மையார் மகனாக அறியப்பட்ட சிறுவன், தன் பதினொன்றாம் வயதிலேயே பாரதி என அனைவராலும் பாராட்டப்பட்டார். பாரதி முதல் மகாகவியாக உருவெடுத்தது வரையிலான காலகட்டம் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு என பொதுநலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகாகவி பாரதியார் தன் பேச்சால், எழுத்தால், செயலால் இன்றளவும் நாட்டு மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.

கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், இதழியலாளர், அரசியல்வாதி, சமூக தீர்திருத்தவாதி என மகாகவி பாரதியார் பயணித்த பரிணாமங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

இந்திய விடுதலை, உலக வரலாறு, மானுடம் குறித்த பாரதியாரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் இளம் தலைமுறையினருக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.

”எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேணும் தெளிந்த நல்லறிவு வேண்டும் “ என்ற வரிகளுக்கு ஏற்ப தான் கொண்ட உறுதியாலும், தன்னம்பிக்கையாளும் தடைகளை தகர்த்தெறிந்தார் மகாகவி பாரதியார்.

தாய்மொழி தமிழ் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்த பாரதியார், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணொம் என கவி புனைந்தார். சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரஞ்ச், ஆங்கிலத்தில் தனிப் புலமை பெற்றவராக திகழ்ந்த பாரதியார், அம்மொழிகளில் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்தார்.

எழுத்திற்கும், பேச்சிற்கும் இடைவெளியில்லாத வாழ்க்கையை வாழ்ந்த பாரதியார். தான் பிறந்த சமூகத்திலும், வாழ்ந்த சமூகத்திலும் நிலவிய அனைத்துவிதமான மூட நம்பிக்கைகளை எதிர்த்து அனைவரும் சமம் என்பதை துணிச்சலோடு முழங்கினார்.

தமிழ், கவிதை, எளிமை, மனிதம், ஈரமும் இணைந்தவராக தன்னை கட்டமைத்துக் கொண்ட மகாகவி பாரதி, தன் முப்பத்தி ஒன்பதாம் வயதில் உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றாலும் உலக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

Tags: Let's honor the memory of Mahakavi Bharatiyara multifaceted creator!C. Subramania Bharati Indian writer and poet
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி போல நடித்து யாசகம் பெறும் நபர்!

Next Post

இமாச்சலில் நீடிக்கும் பதற்றம்! : சர்ச்சைக்குரிய மசூதியை உரிமை கோரும் வக்ஃப்!

Related News

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

H-1B முதல் GREEN CARD வரை….விதிகளை கடுமையாக்கும் ட்ரம்ப் அரசு : இந்தியர்களுக்கு பாதிப்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies