சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 108 இடங்களை கைப்பற்றியுள்ள தவெகவுக்கு 10 தொகுதிகள் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பேரில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
















