சட்டமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியை கைப்பற்றிய சௌமியா அன்புமணிக்கு வாணியம்பாடியில் பாமக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தர்மபுரி சட்டமன்ற தேர்தலில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அமோக வெற்றி பெற்றார். இதற்காக அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வாணியம்பாடியில் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
















